மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> I.P.L சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

மும்பையில் இன்று நடந்த ஐ.பி.எல்., இரண்டாவது அரையிறுதியில் சென்னை கிங்ஸ் அணி, கில்கிறிஸ்ட் தலைமையிலான 'நடப்பு சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.சென்னை அணியின் பத்ரிநாத் 37 ரன்களும் தோனி 30 ரன்களும் அனிருதா 24 ரன்களும் எடுத்தனர்.

ஹாரிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 143 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 19.2 ஓவரில் ‌அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன் மட்டுமே எடுத்தது.

இதன்படி சென்னை அணி 38 ரன்னில் அபார வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது. வரும் 25 ஆம் தேதி நடைபெறும் பைனலில் மும்பை- சென்னை அணிகள் மோதுகின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.