ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடைபெற்றதாக எழுந்துள்ள ஊழல் புகார்களை அடுத்து, மொரீஷியஸ் வழியாக ஐ.பி.எல். -இல் நுழைந்த பல நூறு கோடி ரூபாய்கள் குறித்து சில நிறுவ்னங்களை விசாரிக்க மத்திய அரசு பொருளாதார விசாரணைக் குழு ஒன்றை மொரிஷியஸ் நாட்டிற்கு அனுப்பவுள்ளது.
முதல் ஐ.பி.எல். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, குறிப்பிட்ட மொரீஷியஸ் நிறுவனங்கள் முளைத்தன. இந்த நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய தொகை ஐ.பி.எல். அணிகளுக்குள் வந்துள்ளதாக விசாரணையாளர்களின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மொரீஷியஸ் செல்லும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைக்குப் பிறகு மொரீஷியஸ் நிறுவனங்கள் வாயிலாக ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்குள் நுழைந்த நிதி விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் ஐ.பி.எல். 2008ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோது, குறிப்பிட்ட மொரீஷியஸ் நிறுவனங்கள் முளைத்தன. இந்த நிறுவனங்கள் மூலம் மிகப்பெரிய தொகை ஐ.பி.எல். அணிகளுக்குள் வந்துள்ளதாக விசாரணையாளர்களின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மொரீஷியஸ் செல்லும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணைக்குப் பிறகு மொரீஷியஸ் நிறுவனங்கள் வாயிலாக ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்குள் நுழைந்த நிதி விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.