மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரிந்துவிட்டால் ஒன்று சேர்வது மகா கஷ்டம்.

பாடலாசிரியர்களும், இசையமைப்பாளர்களும் சண்டைப் போட்டுக்கொண்டு பிரிவதென்பது எப்போதாவது நடக்கும். அப்படி பிரிந்துவிட்டால் அவர்கள் ஒன்று சேர்வது மகா கஷ்டம். வைரமுத்துவும், இளையராஜாவும் இணைந்த காலத்தில் கொடுத்த பாடல்கள் மனசைவிட்டு என்றென்றும் பிரியாது. ஆனால் இவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள்.

அதேபோல தற்போது பிரிந்திருப்பவர்கள் லிஸ்ட்டில் ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மேனன், செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா. மெகா ஹிட் பாடல்களைக் கொடுத்தவர்கள். இதற்கிடையே பாடலாசிரியர் முத்துக்குமாரும் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஆதரவாக செல்வராகவன் படங்களுக்கு இனி பாடல் எழுதமாட்டேன் என்றார்.

அதுபோலவே செல்வராகவனின் படத்தில் பாடல் எழுதவில்லை. செல்வா-யுவன்-முத்து மூவரும் இணைந்தால் நல்ல பாடல்கள் வருமென்று நினைத்த சினிமா அனுபவசாலி ஒருவர் முத்துக்குமாரை அணுகி கேட்க, இனி செல்வராகவன் படத்துக்கு நான் பாடல் எழுத சான்ஸே இல்லை வேறு பேசுங்கள் என்றாராம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.