மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நடிப்பில்லாமல் நானில்லை

இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்திற்குப் பிறகு தம்பி ராமையா இயக்கும் படம் ஒரு கூடை முத்தம். தலைப்பு கவிதை போல இருந்தாலும் முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார். இது வழக்கமான ஐந்து நண்பர்கள் பற்றிய கதை என்றாலும் ஒவ்வொரு கேரக்டரையும் அருமையாக செதுக்கியுள்ளேன் என்கிறார்.

மேலும், இப்படத்தை தயாரிக்கும் நல்லா சரண் ரெட்டி என்னை சுதந்திரமாக இயக்க அனுமதித்தார். பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்தால் அவர்களுக்கு ஏற்ற மாதிரி கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டும். அதுவும் காமெடி நடிகர்கள் என்றால் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றிருக்கும்.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் என்பதால் வேண்டியதை கேட்டுப் பெறுகிறேன். டென்ஷன் இல்லாமல் படப்பிடிப்பையும் முடித்துள்ளேன். படம் இயக்கினாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பதை விடமாட்டேன் என்கிறார் தம்பி. அசத்துங்க, வடிவேலுக்கு இன்னும் ஒரு கதை ரெடி பண்ணிப் பாருங்களேன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.