மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கௌதம் மேனன் காட்டில் அடை மழை.

கௌதம் வாசுதேவ மேனன்... தமிழ் திரையுலகில் கொஞ்சம் ஆச்ச‌ரியமான பெயர். அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் படங்களும் தருவார், அதேநேரம் படத்தின் குவாலிட்டியிலும் குறைவிருக்காது. ஒரே நேரத்தில் பல படங்களில் பணிபு‌ரியாமல் இவரால் இருக்க முடியாதோ என்றும் தோன்றும்.

தற்போது குறுகியகால தயா‌ரிப்பாக க்ரைம் த்‌ரில்லர் ஒன்றை இயக்கி வருகிறார். அடுத்து அ‌ஜீத் நடிக்கும் படம். இதன் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் இன்னும் முழுமையடையவில்லை என்று அ‌ஜீத்தே கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் இயக்குவதற்கான வேலைகளையும் ஒருபுறம் கவனித்து வருகிறார்.

லேட்டஸ்ட் தகவல், விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறார்.

கௌதம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் ஆசை. விக்ரமை இயக்க வேண்டும் என்பது கௌதமின் நீண்ட நாள் விருப்பம். இப்போது இரண்டும் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பும் அமைந்திருக்கிறது.

செல்வராகவன் மற்றும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தலா ஒரு படம் நடிக்கும் விக்ரம் இந்தப் படங்கள் முடிந்ததும் கௌதம் இயக்கும் படத்தில் அனேகமாக நடிக்கலாம் என்கிறார்கள்.

கௌதம் காட்டில் வெறும் மழையில்லை, அடை மழை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.