
இந்தமுறை இந்த கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில், வெங்கட்பிரபு.
அஜீத்தும் வெங்கட்பிரபுவும் நண்பர்கள். சரியாகச் சொன்னால் அஜீத் வெங்கட்பிரபுவின் நலம் விரும்பி. நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று அஜீத் வெங்கட்பிரபுவிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்திருப்பதாக வெங்கட்பிரபு தரப்பு கூறுகிறது.
தயாரிப்பாளர் சிவாவுக்காக பூச்சாண்டி என்ற படத்தை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. காலம் தகைந்து வந்தால் பூச்சாண்டியை கிடப்பில் போட்டு அஜீத் படத்தை வெங்கட்பிரபு இயக்கலாம் என்கிறார்கள். அஜீத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையில் வெங்கட்பிரபு தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு நாளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.