மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்க்கு எதிராக பல குற்றச்சாட்டுகள்

விஜய் படத்தால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாற்றியிருக்கும் திரையரங்கு உ‌ரிமையாளர்கள், உ‌ரிய நஷ்டஈடு தராதபட்சத்தில் ஜூன் மாதம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெ‌ரிவித்தனர்.

விஜய் படங்கள் ச‌ரியாக ஓடாவிட்டாலும் வ‌சூலை அள்ளித் தருவதாக தயா‌ரிப்பாளர்களும், விஜய் தரப்பும் பேசி வந்தனர். இந்நிலையில் பத்தி‌ரிகையாளர்களை சந்தித்த திரையரங்கு உ‌ரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், விஜய் படங்களை வாங்கியதால் 30 கோடி ரூபாய் திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெ‌ரிவித்தார்.

விஜய்யின் கடைசி ஆறு படங்கள் ச‌ரியாகப் போகவில்லை. இந்த ஆறு படங்களால் முப்பது கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இந்த திரைப்படங்களின் கதைகள் ஒரே மாதி‌ரி இருப்பதும் ஒரு காரணம் என்று பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பின் போது பன்னீர்செல்வம் தெ‌ரிவித்தார்.

விஜய் படங்களின் ப்‌ரிவியூ திரையரங்கு உ‌ரிமையாளர்களுக்கு காட்டப்படுவதில்லை. படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை பார்க்காமலே வாங்குகின்றோம். இனி இந்தமுறை மாற வேண்டும் என்றும் அவர் தெ‌ரிவித்தார்.

35 சதவீத நஷ்டஈடு விஜய் தராதபட்சத்தில் ஜூன் மாதம் முதல் வாரம் நடக்கும் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என பன்னீர் செல்வம் தெ‌ரிவித்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.