மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் கருணாஸ் பிடிவாதம்

பலர் எதிர்ப்பு தெ‌ரிவித்த பிறகும் இலங்கைக்கு செல்வது என்பதில் உறுதியாக இருக்கிறார் காமெடியர் கருணாஸ். இவர் செல்வது முடி காணிக்கை செலுத்த அல்ல, சிங்களவனின் வானொலியில் அவனை புகழந்து பாடுவதற்கு.

இந்த துரோகத்தை நாம் தமிழர் இயக்கத்தினர் தெ‌ளிவாக தங்கள் அறிக்கை மூலம் பு‌ரிய வைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் அவர் அடங்குவதாக இல்லை. சப்பைக் காரணங்களால் தனது இனத்துரோகத்தை மறைக்க முயன்று வருகிறார்.

இந்நிலையில் இந்த இனப் பிரச்சனையை சாதிப் பிரச்சனையாக்கும் சதியும் நடந்து வருகிறது. சென்னை முழுக்க கருணாஸை ஆத‌ரித்து அவரது சாதியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். காமெடியா‌ரின் ஆசிர்வாதத்துடனேயே இந்த இழி செயல்கள் அரங்கேறியுள்ளன.

சொந்த இனத்துக்கே துரோகம் செய்யும் இவர்களை எப்படி கலைஞர்கள் என்பது?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.