மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நெருக்கடியில் ரத்த ச‌ரித்திரம்

ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கும் ரத்த ச‌ரித்திரம் ஆந்திராவில் நடந்த உண்மைக் கதை. ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ப‌ரி‌ட்டால ரவி மற்றும் அவனது கூட்டாளி சூ‌ரி ஆகியோரைப் பற்றியது.

படம் தொடங்கப்பட்ட போதே ப‌ரி‌ட்டால ரவியின் மனைவி சுனிதா எதிர்ப்பு தெ‌ரிவித்தார். தனது கணவர் ரவுடி இல்லை, அவர் சிறந்த மனிதாபிமானி என்பது சுனிதாவின் கருத்து.

படம் முடிந்த நிலையில் முதலில் எனக்குதான் படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். என்னடைய கணவரை தவறாக சித்த‌ரித்திருந்தால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என திடீர் மிரட்டல் விடுத்துள்ளார் சுனிதா. அப்படியே படத்தை சுனிதாவுக்கு திரையிட்டு காண்பிக்காமல் ‌ரிலீஸ் செய்தால் நீதிமன்றம் சென்று தடை வாங்கவும் தயங்க மாட்டாராம்.

தாவூத்தை பற்றியே படம் எடுத்த வர்மா இந்த பூச்சாண்டிக்கு பயப்படுவார் என்றா நினைக்கிறீர்கள்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.