மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> என் வெற்றிக்குப் பின்னால் என் ரசிகர்கள் - விஜய்

ஆஸ்கர் பிலிம்ஸ் என்றால் பிரமாண்டம் என்பதை இன்னொருமுறை நிரூபித்தார் ரவிச்சந்திரன். இன்று நடந்த வேலாயுதம் பட தொடக்க விழாவில் எள்ளைப் போட்டிருந்தால் அது எண்ணெய்யாகி ஓடியிருக்கும். அந்தளவுக்கு கூட்டம்.

எல்லா நடிகர்களுக்கும் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கு ஆஸ்கர் பிலிம்ஸில் நடிக்க வேண்டும் என்று ஆசை என சுவாரஸியத்தை கொட்டியது விஜய்யின் பேச்சு. எல்லோருடைய வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருப்பார்கள். என்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது ரசிகர்கள் என்று சொன்ன போது அரங்கம் கைத்தட்டலால் அதிர்ந்து அடங்கியது.

விழாவில் படத்தின் நாயகிகள் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி இருவரும் கலந்து கொண்டனர். இருவருக்கும் தலா நாலு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டார் விஜய். படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா பற்றி குறிப்பிட்டவர், ஜெயம் ரவி போல நானும் அவருக்கு ஒரு தம்பி என்றார் (கட்சி ஆரம்பிச்சிடலாம் பாஸ்).

விழாவில் எடிட்டர் மோகன், எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் மனைவி சங்கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

2 நான் சம்பாதிச்சது:

  1. hai hero.... unnal mudiyum, idhu ne sonnadhu... unnala mattum thaan mudiyum! idhu unnudaiya Fans sollitu irukuradhu...! Lets start ur ACTION...

    ReplyDelete
  2. hai hero.... unnal mudiyum, idhu ne sonnadhu... unnala mattum thaan mudiyum! idhu unnudaiya Fans sollitu irukuradhu...! Lets start ur ACTION...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.