
இந்த பரபரப்பு அரசியலுக்கு நடுவில் விஜய் நடிக்கும் பகலவன் படத்தை இயக்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வந்தார் சீமான். படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளும் முடிவுறும் நிலையில் இருந்தன. இந்நிலையில்தான் மூன்று பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது.
இதன் காரணமாக வேலாயுதம் படத்துக்குப் பிறகு சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனக்காக கதை எழுதி தயாராக வைத்திருக்கும் லிங்குசாமிக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று விஜய் யோசித்து வருவதாகக் கூறுகிறார்கள்.
சீமானின் அரசியல் பகலவனை எழவிடாமல் செய்யும் என்பதே இப்போதைய நிலை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.