மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சத்யராஜுடன் நட்சத்திர பேட்டி

சத்யராஜுடன் அறிமுகமான பல நடிகர்கள் இப்போது திரையுலகில் இல்லை. இருக்கும் சிலரும் துண்டு துக்கடா வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். கமல், ர‌ஜினி போல மாஸ் ஹீரோவல்ல என்ற போதிலும் சத்யராஜை வைத்து படமெடுக்க இன்றும் தயாராகவே இருக்கிறார்கள் இயக்குனர்களும், தயா‌ரிப்பாளர்களும். ரசிகர்கள் அவரது நடிப்பை பார்க்க‌த் தயாராக இருப்பதே இதற்கு காரணம்.

விரைவில் சத்யரா‌ஜ் நடித்த கௌரவர்கள் திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு பத்தி‌ரிகையாளர்களை சந்தித்தார் சத்யரா‌ஜ். சுவாரஸியமான கேள்விகளும் சத்யரா‌ஜின் சீ‌ரியஸான பதில்களும் வாசகர்களுக்காக.

கௌரவர்கள் படத்தைப் பற்றி சொல்லுங்கள்...?

ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் போது சஞ்சய்ராம் இந்த‌க் கதையை என்கிட்ட சொன்னார். அப்போ நான் அவர்கிட்ட சொன்னது, ‘இப்போ நீங்க சொன்ன கதையை அப்படியே எடுக்கணும.’ அவரும் ச‌ரின்னு சொன்னார். படத்தோட ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தேன். சொன்ன மாதி‌ரியே பிரமாதமாக வந்திருக்கிறது.

இந்தப் படத்தில் உங்களுக்கு எந்த மாதி‌ரி வேடம்?

புதிய வானம் படத்தில் அப்பா சிவா‌ஜி கூட நடிச்சேன். நான் அவரை செல்லமா அப்பான்னுதான் கூப்பிடுவேன். அவர்கிட்ட ஒருமுறை உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும்னு கேட்டேன். அதுக்கு அவர் ‘ஏண்டா கவுண்டா, நான் யாரைப் பார்த்து காப்பி அடிக்கிறேன்னு தெ‌ரிஞ்சுக்க கேட்கறியா’ன்னு கிண்டல் பண்ணினார். அப்புறம் திலீப்குமார்னு சொன்னார். சிவா‌ஜி சாரே சொல்லிருக்காரேன்னு திலீப்குமாரோட படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். திலீப் சார் மாதி‌ரி ஒரு படத்திலாவது நடிக்கணும்னு ஆசை இருந்தது. சர்கார் படத்தில் அமிதாப்பச்சனுக்கு அந்த மாதி‌ரி ஒரு வேடம் கிடைச்சது. ‌கிட்டதட்ட இருபது வருட காத்திருப்புக்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு வேடத்தில் என்னை நடிக்க வைத்து சஞ்சய்ராம் என்னை பெருமைப்படுத்தியிருக்கார்.

உங்களுடைய இன்றைய வளர்ச்சிக்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க?

ஒரு நடிகனுக்கு எப்போதுமே முக்கியம் இயக்குனர்கள்தான். சத்யரா‌ஜ்ங்கிற ஒரு நடிகன் இன்னைக்கு சினிமாவில் இருக்கான்னா அதுக்கு காரணம் இயக்குனர் மணிவண்ணன்தான். சத்யரா‌ஜ் ட்ரெண்டை உருவாக்குனதே அவர்தான். அந்த ட்ரெண்டில் இருந்து வேதம் புதிது படம் மூலம் என்னை மாற்றியவர் பாரதிராஜா. பூவிழி வாசலிலே படத்தில் வேறொரு சத்யரா‌ஜ். ஜோஷியின் ஏர்ப்போர்ட், சந்தான பாரதியின் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு வித்தியாசமான வேடங்களை இயக்குனர்கள்தான் தந்தாங்க.

வாழ்க்கையின் மிகப் பெ‌ரிய பாக்கியமாக பெ‌ரியார் படம் கிடைத்தது. அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாச்சி. அது முழுக்க முழுக்க தங்கர்பச்சான் உருவாக்கிய கதாபாத்திரம்.

நான் ஒரு படப்பிடிப்புக்கு போகும் போது டைரக்டர் என்ன சொல்றாரோ அதை‌த்தான் செய்வேன். இப்போதும் அதை‌த்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஏன்னா, என்னை உருவாக்கியது இயக்குனர்கள்தான்.

படத்தில் வேறு யார் யார் நடித்திருக்கிறார்கள்?

விக்னேஷ், ரஞ்சித், மோனிகா, பானுசந்தர்னு நிறைய பேர் நடிச்சிருக்கோம். எல்லோருக்குமே சிறப்பான வேடங்கள். நான் தொண்டைமான்ங்கிற வேடத்தில் நடிக்கிறேன். கர்ணனைப் போல வள்ளல் குணம் கொண்ட கதாபாத்திரம்.

இந்த கேரக்டருக்காக வித்தியாசமாக ஏதாவது செய்திருக்கிறீர்களா?

இந்தப் படத்தில் நடிக்கும் போது, நிதானமா நிறைய டைம் எடுத்து பேசுங்கன்னு இயக்குனர் சொன்னார். அப்படி பேசும்போது ஒரு ஆழம் கிடைச்சது. படம் பார்க்கும் போது உங்களுக்கு இது தெ‌ரியும். இப்படியொரு கதாபாத்திரம் தந்த சஞ்சய்ராமுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெ‌ரிவிச்சுக்கிறேன்.

படத்தின் இசை?

தினா இசையமைச்சிருக்கார். கடலோரக் கவிதைகள் படத்தில் இளையராஜா சார் தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ்னு ஒரு பாடல் பின்னணி இசையில் சேர்த்திருப்பார். அது மத்தப் பாடல்களைவிட ஹிட்டாயிடுச்சி. அதே மாதி‌ரி இந்தப் படத்திலும் சில துண்டுப் பாடல்களை சஞ்சய்ராம் சேர்த்திருக்கிறார். அதில் ஒரு ஃபயர் இருக்கிற மாதி‌ரி தினா இசையமைச்சிருக்கார். நிச்சயமா எல்லாப் பாடல்களும் ஹிட்டாகும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.