மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜயகுமார் திரையுலகில் 50 ஆண்டை நிறைவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசனைத் தொடர்ந்து மேலுமொரு தமிழ் நடிகர் திரையுலகில் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்திருக்கிறார். அவர், விஜயகுமார்.

1949ல் பிறந்த விஜயகுமார் முத‌ன் முதலில் சினிமாவில் நடித்தது 1961ல். படம் ஸ்ரீவள்ளி. சிவா‌ஜி கணேசன், பத்மினி இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விஜயகுமார் முதலில் போட்ட வேடம், பால முருகன்.

கதாநாயகனாகவும் குணசித்திர நடிகராகவும் தனது தடத்தை தமிழ் சினிமாவில் அழுத்தமாகவே பதித்திருக்கிறார் விஜயகுமார். குறிப்பாக பாரதிராஜாவின் அந்திமந்தாரையும், கிழக்குச் சீமையிலேயும் மறக்க முடியாதவை.

இன்றும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவரும் விஜயகுமாரை இந்தத் தருணத்தில் மனமார வாழ்த்துவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.