மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சீமான் படம் தள்ளிவைப்பு.

ராமன் தேடிய சீதை படத்தை இயக்கிய ஜெகன்‌ஜி அடுத்து சீமான் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தது. இந்தப் படத்திற்காக சிபியிடமும் கால்ஷீட் வாங்கப்பட்டது.

படப்பிடிப்புக்கு கிளம்பும் நேரம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக தமிழக அரசு சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்து அவரை சிறையில் அடைத்தது. இந்த சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டால் ஒரு வருடம் கண்டிப்பாக உள்ளே இருந்துதான் ஆக வேண்டும்.

இந்த திடீர் திருப்பத்தால் ஜெகன்‌ஜியின் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேறொரு படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் ஜெகன்‌ஜி. கதை, திரைக்கதை எல்லாம் தயாரான நிலையில் பாடல் கம்போஸங்குக்கான வேலைகளுக்கு தயாராகி வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.