மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய் காவலன் பட தயா‌ரிப்பாளருக்கு கொலை மிரட்டல்.

கலாபூர்வமற்ற வியாபா‌ரிகள் கலைத்துறையில் பெருகினால் ரவுடி‌யிஸம் மட்டுமே பெருக்கெடுக்கும் என்பதற்கு இதுவொரு மோசமான உதாரணம்.

விஜய்யின் காவலன் படத்தை தயா‌ரித்த ரமேஷ்பாபு போலீஸில் புகார் தந்திருக்கிறார். இயக்குனரும், தயா‌ரிப்பாளருமான ஷக்தி சிதம்பரம் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்பது புகா‌ரின் சாராம்சம்.

காவலன் படத்தை ரமேஷ்பாபு தயா‌ரிக்க, அதன் விநியோக உ‌ரிமையை ஷக்தி சிதம்பரம் வாங்கினார். ஆனால் சொன்னபடி அவரால் பணம் கொடுக்க முடியாததால் ஷக்தி சிதம்பரம் தந்த பணத்தை திருப்பிச் செலுத்தி விநியோக உ‌ரிமையை ரத்து செய்தனர். காவலனுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

ஆட்சி மாறிய பிறகு ஷக்தி சிதம்பரத்தின் போக்கில் மாற்றம். ஏதோ அவரே ஆட்சியைப் பிடித்தது போல் மற்றவர்களை மிரட்டத் தொடங்கினார். தயா‌ரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று அவர்களுக்கு முதல் மிரட்டல் விடுத்தவர் ஷக்தி சிதம்பரம்தான்.

ரமேஷ்பாபு காவலன் படத்தின் சேட்டிலைட் உ‌ரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு 5.5 கோடிக்கு விற்றார். இதில் 2.75 கோடி மட்டுமே செட்டில் செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தை தொலைக்காட்சி தராமல் இழுத்தடிக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் இடைபுகுந்த ஷக்தி சிதம்பரம் ரமேஷ்பாபுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். ஷக்தி சிதம்பரம் மீது போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.