மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இதற்கு சிம்பு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கசப்பை கண்ணை மூடி விழுங்கிவிடுவதுதான் சினிமா நட்சத்திரங்களின் பழக்கம். கசப்பின் கொடுமையைப் பொறுத்து அது வெளியேயும் வருவதுண்டு. பரத் விஷயத்தில் அது வெளியே வந்திருக்கிறது.

வானம் படத்தில் சிம்புவைப் போல பரத்துக்கும் முக்கிய வேடம். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது அனைத்து நடிகர்களுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று இயக்குனர் க்ருஷிடம் உறுதி செய்து கொண்டுதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால் நடந்தது வேறு.

படத்தின் விளம்பரங்களிலும் ப்ரமோஷன்களிலும் சிம்பு மட்டுமே முக்கியத்துவப்படுத்தப்பட்டார். பரத் நடித்ததற்கான சுவடே இல்லை. இதனை வெளிப்படையாக தெ‌ரிவித்திருக்கிறார் பரத். அத்துடன் இந்த கசப்பான அனுபவம் இனி பல ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் படத்தில் நடிப்பதா என்று யோசிக்க வைத்திருப்பதாகவும் தெ‌ரிவித்துள்ளார்.

இதற்கு சிம்பு என்ன பதில் சொல்லப் போகிறார்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.