மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கேள்விக்குறி போட்ட விஜயகாந்த்.

தொடர்ந்து படங்கள் ஓடாவிட்டாலும் பி, சி சென்டர்களில் விஜயகாந்துக்கென்று ம‌ரியாதையும், வசூல் மகசூலும் இருக்கத்தான் செய்கிறது. எதிர்க்கட்சித் தலைவரை திரையில் ஹீரோவாகப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அவர்கள் எதிர்பார்ப்பை உணர்ந்தவர் போல, சினிமா எனது தொழில் அதை ஒருபோதும் விடமாட்டேன் என்று அறிவித்தார் விஜயகாந்த். தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்த‌ப் பொன்னாள் எப்போது என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இதற்கு காரணம் இருக்கிறது.

தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் தொகுதியில் தங்கியிருந்து கண்டிப்பாக மக்கள் பணி செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் விஜயகாந்த். இதன் காரணமாக படத்தயா‌ரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தனது தயா‌ரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தையே மூடிவிட்டார். விஜயகாந்திடமிருந்து அடுத்த சிக்னல் வரும்வரை எந்தப்படத் தயா‌ரிப்புமில்லை என்று உறுதியாக தெ‌ரிவித்துள்ளார். இதே நிலையில்தான் இருக்கிறார் நடிகரும் தயா‌ரிப்பாளருமான அருண் பாண்டியன்.

தொண்டர்களே இப்படியென்றால் தலைவர் எப்போது சினிமா பக்கம் திரும்புவார் என்பதுதான் ரசிகர்களின் கேள்விக்குறி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.