மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா முடிவு கௌதம் முதலில்.

மிஷ்கின், எஸ்.பி.ஜனநாதன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் படம் செய்ய இசைவு தெ‌ரிவித்திருக்கிறார் ‌‌‌ஜீவா. ஜனநாதனின் படத்தில் ஜெயம் ரவியும் உண்டு. அனேகமாக சாpத்திரப் படமாக இருக்கலாம். மிஷ்கின் படத்திற்கு முகமூடி என்று பெயர் வைத்திருப்பது தெ‌ரியும். இதில் சூப்பர் ஹீரோவாக வருகிறார் ‌‌‌ஜீவா. குங்பூ அவசியம் தெ‌ரிய வேண்டிய கதாபாத்திரம். ஏற்கனவே குங்பூ படித்திருந்தாலும் முகமூடிக்காக மீண்டும் தொடரப் போகிறாராம்.

இந்த மூன்று படங்களில் முதலாவதாக - ஆகஸ்ட் 29 அன்று கௌதம் இயக்கும் படம் தொடங்குகிறது. முதலில் தொடங்கும் இந்தப் படத்தைப் பற்றிதான் இதுவரை எந்த தகவலுமில்லை. ஹீரோயின், கதை எல்லாமே மர்மம். ஏன் படத்தின் பெயர்கூட இன்னும் வைக்கவில்லை. என்றாலும் முதலில் தொடங்குவது கௌதமின் படம்தான், அதில் மாற்றமில்லை என்றார் ‌‌‌ஜீவா.

கௌதம் படத்தில் நடிப்பதற்கு வசதியாக நண்பன் படத்தில் இவரது போர்ஷனை மட்டும் விரைவாக முடித்திருக்கிறார் ஷங்கர். பிரமாண்ட இயக்குனருக்கு பிரமாண்டமானது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.