கலைஞர் தொலைக்காட்சிக்கும் தன்க்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட்ட கனிமொழி தெரிவித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோர் கடந்த மே 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரது ஜாமீன் மனுக்களும், அவை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டது .
தற்போது ,வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் நடைபெறவில்லை.
இதனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிபதியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு பற்றி நீதிபதியிடம் பேசினர்.
இந்தக் குற்றச்சாட்டில் கனிமொழி நீதிபதியிடம் பேசும்போது கலைஞர் டி.வி.க்கும் எனக்கும் ஒருபோதும் தொடர்பு இல்லை. அந்த நிறுவனம் எப்படி இயங்குகிறது, அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார்.
அதே போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் பேசும் போது என்னைப் போன்ற பலர் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பலர் மீது இன்னும் சிபிஐ குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறினார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.