
பில்லா 2 படத்துக்குப் பிறகு ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரிக்கும் படத்தில் அஜீத் நடிக்கிறார். இதற்காக பெரும் தொகை அவருக்கு அட்வான்ஸாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குவார் என்றும் மகேஷ்பாபுவின் தூக்குடு படத்தின் ரீமேக்காக இது இருக்கும் எனவும் செய்தி வெளியானது. இன்னும் ரிலீஸாகாத படத்தின் - தூக்குடு நேற்றுதான் வெளியானது - ரீமேக்கில் அஜீத் நடிக்க எப்படி ஒப்புக்கொள்வார் என அப்போதே நாம் சந்தேகம் தெரிவித்திருந்தோம். அதனை ஜெயம் ரவி உறுதி செய்திருக்கிறார்.
தனது ட்விட்டரில் அஜீத் படத்தை ஜெயம் ராஜா இயக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் யார் என்பதை அஜீத்தோ, ரத்னமோ இன்னும் முடிவு செய்யவில்லை, இதுவே உண்மை என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.