மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிந்தன மணிரத்னம்.

மணிரத்னத்தின் புதிய படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன. மீனவர்கள் கதையென்றும், காதல் கதையென்றும் பல பேச்சுகள் உள்ளன. இந்த இரண்டும் கலந்த படம் என்றும் கூறப்படுகிறது.

படத்தில் நடிக்கப் போவது கமலின் இளைய மகள் அக்சரா என்றும் இல்லை ராதாவின் இரண்டாவது மகள் துளசி என்றும் நடிகைகள் விஷயத்திலும் குழப்பம். இப்போது நாம் சொல்லப் போவது எந்த குழப்பமும் இல்லாத தகவல்.

மணிரத்னத்தின் புதிய படத்தின் ஸ்கி‌ரிப்ட் வேலைகள் முடிவடைந்துவிட்டன. பதினைந்து நாட்கள் மணிரத்னத்தின் கொடைக்கானல் பண்ணை வீட்டில் தங்கியிருந்து இந்தப் பணிகளை முடித்துள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்த பதினைந்து தினங்களும் அவருடன் மணிரத்னமும் உடனிருந்துள்ளார்.

இந்தத் தகவலை ஜெயமோகனே வெளியிட்டுள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.