
சம்பளத்துடன் தெலுங்குப்பட உரிமையை வாங்குவது நடிகர் சூர்யாவின் வழக்கம். இதனை அவரது தம்பி கார்த்தியும் ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளார்.
ஆந்திராவில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. அவரது படங்கள் அங்கு நல்ல லாபத்தை சம்பாதித்து வருகின்றன. இதேபோல் கார்த்திக்கும் ரசிகர்கள் திரள ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் இவரது நான் மகான் அல்ல திரைப்படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். ரசிகர்களை மட்டுமின்றி தெலுங்கு நடிகர்களையும் இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது.
இதன் காரணமாக தான் நடிக்கும் படத்தின் தெலுங்கு உரிமையையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார் கார்த்தி. தயாரிப்பாளர்களும் தர தயாராகயிருப்பதுதான் ஆச்சரியம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.