மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நாடோடி எபெக்டுடன் தயாராகியுள்ளது போராளி.

நாடோடிகளுக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் படம். சசிகுமா‌ரின் கம்பெனி புரொடக்சனே இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளது.

எல்லா மனிதனுமே போராளிதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் போராட்டம் இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கரு. கிராமம், நகரம் என இரு பகுதிகளில் நடப்பதாக இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கிராமத்தில் தோள் வரை புரளும் முடியுடனும், நகரத்தில் கிராப் தலையுடனும் இருவேறு கெட்டப்புகளில் சசிகுமார் நடித்துள்ளார். இவருடன் சுப்பிரமணியபுரம் ஸ்வாதியும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் அல்ல‌ரி நரேஷுக்கு சசிகுமார் அளவுக்கு முக்கியமான வேடம்.

நாடோடிகள் படத்துக்கு இசையமைத்த சுந்தர் சி. பாபு இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இயல்பான கதை, வித்தியாசமான காட்சியமைப்புகள், துள்ளலான இசை என்று மீண்டுமொரு நாடோடி எபெக்டுடன் தயாராகியுள்ளது போராளி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.