![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMSoQiouarelPZLxOsTQCJaK1h-QcUCsiMpM-LOQ76Ok8xPUi71CHlUe0mdAYB9E4N5TSTMrR6TzDlEM2lsvgNz0NjmM3qb_DfWzKvyXzTXnJ9LJRTvAO0HVaKgOYlAqBu8ALYyB-kb6U/s400/Malaysia+to+have+announcements+in+Tamil+at+kuala+lumpur+international+airports.jpg)
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு செல்லும் மற்றும் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு வரும் பயணிகளுக்காக, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும் என்று மலேசியா நாடாளுமன்றத்தின் மேலவையில் டத்தோ நல்லா எம்.பி. வலியுறுத்தி பேசினார்.
அவரது கோரிக்கையை ஏற்று, மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உத்தரவின் பேரில், வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் கோலாலம்பூரில் உள்ள 2 விமான நிலையங்களிலும், தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்று மலேசியா போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ கோங் ஹா கடந்த அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.