மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> உண்மையும், உணர்வும் நியாயம்தானே? பாரதிராஜா

மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் பேசிய பாரதிராஜா, தமிழன் பணத்தில் வாழும் நடிகர்கள் இதுவரை முல்லைப் பெ‌ரியாறு விஷயத்தில் குரல் கொடுக்கவில்லை என்று தெ‌ரிவித்தார். பாரதிராஜாவின் இந்தப் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்புமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பாரதிராஜாவின் தமிழுணர்வு மதிக்கப்பட வேண்டியதே. ஆனால் அவரது புதிய படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் இரண்டு ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்துள்ளார். கார்த்திகா, இனியா என்ற அந்த இருவருமே மலையாளிகள். மண்ணின் கதையை சொல்லப் போகிறேன் என்று படத்தை தொடங்கிய பாரதிராஜா மலையாள நடிகைகளுக்கு வாய்ப்பு அளித்ததை பாரதிராஜாவின் மெ‌ரினா பேச்சுடன் ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள்.

மற்றவர்கள் தமிழுணர்வுடன் நடந்து கொள்ளவில்லை என்று சொல்லும் பாரதிராஜா முதலில் தனது படங்களில் மலையாள நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நிறுத்தி, முன் மாதி‌ரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.

நியாயம்தானே?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.