மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மம்பட்டியான் தடை தாண்டுமா ?

பணத்தை இறைத்து, உழைப்பை‌க் கொட்டி மம்பட்டியானை எடுத்திருக்கிறார் தியாகராஜன். முதலில் திரையரங்கு உ‌ரிமையாளர்கள், சன் தொலைக்காட்சிக்கு ஒளிபரப்பு உ‌ரிமை கொடுத்ததால் படத்தை திரையிட மாட்டோம் என்று குடைச்சல் கொடுத்தார்கள். அவர்கள் சமரசமான நிலையில் இன்னொரு தலைவலி. எனது தந்தையை இந்தப் படத்தில் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள் என்று மம்பட்டியானின் மகன் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

தியாகராஜன் நடித்த மம்பட்டியான் நிஜ மனிதனின் கதை. அதனால்தான் அந்தப் படம் அந்த ஓட்டம் ஓடியது. அதனை இந்தக் காலத்துக்கு ஏற்ப பிரசாந்தை வைத்து தியாகராஜன் இயக்கியிருக்கிறார். நிஜ மனிதனின் கதை என்றால் வரும் அதே பிரச்சனைதான் இதற்கும். எங்க அப்பா நல்லவர், அவரை இந்தப் படத்தில் கேவலமா சித்த‌ரிச்சிருக்காங்க என்று ஒ‌ரி‌ஜினல் மம்பட்டியினின் மகன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதற்கு வரும் 12ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வரும் பிரசாந்த் படம்... இப்படியா சோதனை வர வேண்டும்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.