மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள்.

ஐஸ்வர்யாவின் 3 படத்தைப் பற்றிய சில மூடுபனி விவகாரங்களை அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

பிப்ரவரியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகிறது. பெரிய நடிகர்களின் படங்களை முக்கியமான நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்ப்ப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால்தான் பிப்ரவரியில் 3 வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.

3 படம் தமிழில் வெற்றி பெற்றதில் தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார்களாம். கொலவெறி பாடல் 3 யை சர்வதேசப் படமாக்கியதால் தமிழில் படம் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் படத்தை வெளியிடலாம் என்று டப்பிங் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் படம் வெளியாவது தாமதமாகிறது.

இரண்டாவது, 3 படத்தை தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடப் போகிறார்கள். இதற்காக நல்ல இந்தி மொழிபெயர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது மிக முக்கியமானது. தனுஷ் இந்தியில் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் என்றதெல்லாம் சும்மாவாம். விரைவில் இந்திப் படமொன்றில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்பதே உண்மையாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.