
கார்த்தி ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் முதலில் தொடங்கியது சகுனி. சங்கர் தயாள் இயக்கம். ஆனால் அவர் அடுத்து நடிக்கத் தொடங்கிய அலெக்ஸ் பாண்டியன் படத்தைப் பற்றிதான் மீடியாக்களில் செய்தி வருகிறது. இந்தப் படம்தான் முதலில் வரும் என்று சொல்கிற அளவுக்கு அது பற்றிதான் பேச்சு.
சகுனி படத் தயாரிப்பாளர்களுக்கு இதில் ரொம்ப வருத்தம். ஹீரோவிடம் இதுபற்றி கேட்கவும் முடியாது. இந்நிலையில் அவர்களின் வயிற்றில் பால்வார்க்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கார்த்தியின் இரு படங்களில் முதலில் சகுனிதான் வெளியாகும் என்பதுதான் அது. மார்ச் மாதம் ஆடியோவை வெளியிட இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் புதிய விதிமுறையின்படி சகுனியை ஏப்ரல் 13 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுகிறார்கள்.
இந்தப் படத்தில் ஏறக்குறைய இரண்டாவது ஹீரோவாக வருகிறார் சந்தானம்.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.