மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


Samsung Galaxy S4 பிப்ரவரியில் வெளியாகிறதா?

தென்கொரியாவின் மின்னணுவியல் நிறுவனமான சாம்சுங் இந்த ஆண்டின் இறுதி அறிக்கையில் மிக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தனது புதிய தயாரிப்பான சாம்சுங் கேலக்ஸி எஸ் 4 வெளியிடுவது குறித்ததாகவும் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சுங் கேலக்ஸி எஸ் 3 கடந்த மே மாத இறுதியில் தான் வெளியானது. ஆனால் சாம்சுங்கின் அடுத்த வெளியீடான கேலக்ஸி எஸ்-4 பற்றிய பரபரப்பு சில மாதங்களுக்கு முன்பே பரவத் தொடங்கிவிட்டது.

ஹெச்டி திரை, 13 மெகாபிக்சல் கேமரா, வொயர்லெஸ் சார்ஜர், மொபைல் பேமண்ட் வசதிகள் என பல்வேறு வசதிகள் இந்த மாடலில் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சுங்கின் இந்த ஆண்டுக்கான மாபெரும் கருத்துக்களம் நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை மொனாக்கோவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு ஐரோப்பாவில் நடந்த மாபெரும் நிகழ்வோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.