மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


கோத்தபாயவின் கடல் வழியாக நாட்டை விட்டு தப்பும் திட்டம் முறியடிப்பு. விரைவில் கைது செய்யப்படும் அபாயம்,

அதிகாலை 3 மணியளவில் கோத்தபாயவும் அவருடைய ஊழல்களுடன் தொடர்புடைய சகாக்கள் 15 பேரும் காலியில் இருந்து மாலைதீவை நோக்கி அதிவேக படகில் கடல் வழியாக நாட்டை விட்டு தப்ப ஆயத்தமான நிலையில் பொலிசாரின் நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டுள்ளது.

காலி கடற்கரை ஓரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேக படகு ஒன்று நடமாடியதை அவதானித்த பொலிசார் அந்த படகை அன்மித்த போது  படகு வேகமாக கடலுக்குல் சென்றுள்ளது. பொலிசார் இதனை கடற்படைக்கு தெரியப்படுத்தியதை அடுத்து கடற்படையினரின் உதவியால் படகை இடைமறித்து சோதனை செய்த வேலை அதற்குள் உணவுப் பொதிகள், மதுபானங்கள் உடைகள் இருந்ததாகவும் படகில் இருந்தவரின் தொலைபேசியை சோதனையிட்டபோது அவர் சில நிமிடங்களுக்கு முன்னர் கோத்தபாயவுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வழங்கிய தகவளின் படி கோத்தபாய தப்பிச் செல்ல ஆயத்தமானது தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் கோத்தபாய கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி ஆதாரம் : The Independent
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.