மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


சேதனப் பசளை முறையிலான பயிர்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பெண்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறி.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்  “அகம் “நிறுவனம்  பெண்களுக்கான பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது .

இதன் கீழ்  சுயதொழில் ஈடுபட்டுள்ள பெண்களை மேம்படுத்தும்  வேலைத்திட்டத்தின்   சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக ஒரு நாள் பயிற்சி நெறி “அகம் “நிறுவனத்தின்  இணைப்பாளர் தங்கராசா திலீப்குமார் ,  தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  விவசாய திணைக்களத்தில்  இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில்  வெல்லாவெளி , பட்டிப்பளை , வாகரை , கிரான் ,வவுணதீவு ஆகிய பிரதேசங்களில்   சேதனை  பசளை முறையில்  பயிர் செய்கையினை மேற்கொண்டுள்ள பயனாளிகளில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கு  சேதனை பசளை முறையிலான பயிர்செய்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்   வளவாளர்களாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  விவசாய திணைக்கள போதனாசிரியர்  டி .பிரதீபன் , டி .ரமேஷன் . என் . பார்த்திபன்   ஆகியோரினால் பயிற்சிகள் அளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  நிறுவன திட்ட இணைப்பாளர்  திருமதி எஸ் . நிரஞ்சினி  நிறுவன கள உத்தியோகத்தர்கள்   மற்றும்  பயனாளிகளும்  கலந்துகொண்டனர்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)




Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.