மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

மட்டக்களப்பு தாமரைக்கேணி அரசடியில் நிறுவப்பட்டுள்ள  பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் சாயிகமலத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா இன்று இடம்பெற்றது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தினத்தை முன்னிட்டு   சாயிகமல நிலையத்தின்  தலைவர் ஸ்ரீ.எஸ்.சாமித்தம்பி தலைமையில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக  தூய அன்பின் பொற்காலம் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதபாராயணம், சாயி அஷ்டோத்திரம் , சாயி பஜனையினை தொடர்ந்து திருப் பொன்னூஞ்சல் நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்ந்து  மகா மங்கல ஆரத்தி விபூதிப்  பிரதாசதுடன் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின நிகழ்வுகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின்  பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.







Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.