மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் வீதி போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம்.

கொழும்பு நகரிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் இன்று முதல் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் ஶ்ரீஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக எண்ணிக்கையான போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி வீதிச் சட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கொழும்பிற்குள் பிரவேசிக்கும் ஏனைய வீதிகளிலும் வீதிச் சட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன. இதன்போது உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் வீதிகளை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன நெரிசலை குறைப்பதும், விபத்துகளை தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்அடிப்படையில் , கொழும்புக்குள் நுழையும் வகையிலான அனைத்து வீதிகளிலும் காலை 6 மணி தொடக்கம் வீதி ஒழுங்கு சட்டம் வலுவாக கடைபிடிக்கப்படும் என போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

- A.D.ஷான் -
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.