இன்று முதல் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்பட்டு முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பரீட்சை வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக விளங்கும் 87 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
55 நகரங்களின் 87 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 109 மத்திய நிலையங்களில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- A.D.ஷான் -
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.