மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கீழ் இயங்கும் கல்லடி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நகர்புற மாதிரி வீட்டுத்தோட்ட பயிர்செய்கை திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாக பல விரி வாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி வீட்டுத்தோட்டம் அமைத்தல் தொடர்பான கருத்தரங்கு இன்று இடம்பெற்றது. இடம்பெற்ற கருத்தரங்கு நிகழ்வில் வளவாளராக கல்லடி விவசாய போதனாசிரியர் திருமதி தெய்வமனோஹாரி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வின் போது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்டும் கொடுப்பனவுகளும் மற்றும் மாதிரி வீட்டுதோட்டதிற்கான மரக்கன்றுகளும், விதைநாற்றுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் டி.மேகராஜ், முன்பள்ளி அபிவிருத்தி உதவி கல்வி பணிப்பாளர் எம்.புவிராஜ் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.