![](http://tbn0.google.com/images?q=tbn:LBao1WFnM9LXdM:http://valai.blogspirit.com/images/medium_nsv.jpg)
இப்போது முதல் தடவையாக நயன்தாரா இதுபற்றி கருத்து சொல்லி உள்ளார். ஐதராபாத்தில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி வருமாறு: யாரையும் காதலிக்கவில்லை, நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைத்தான் காதலிக்கிறேன். அவர் எனக்க நண்பர்தான்
நான் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. நான் பதில் சொல்ல வேண்டியது எனது பெற்றோருக்குத்தான். அவர்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். முழு சுதந்திரமும் கொடுத்து இருக்கிறார்கள். அதை வீணடிக்கமாட்டேன்ஒரு கதை பற்றி இருவரும் சந்தித்து விவாதித்தோம். வேறு எந்த காரணமும் இல்லை. சினிமாவுக்காக மட்டுமே நடந்த சந்திப்பு அது. நான் யாரையும் காதலிக்கவில்லை
ஆண்கள் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அப்படி நடிக்கிறேன்
அந்த படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தனர். பிறகு நான் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். மறுத்து விட்டேன். இதனால் என்னை விட குறைவான சம்பளம் வாங்கும் ஒரு நடிகையை தேர்வு செய்து நடிக்க வைத்தனர், இதில் தவறு ஏதும் இல்லை
தலைப்பை கரெக்டா வையிங்கப்பா!
ReplyDeleteபகீர்னு இருக்கு பார்த்தவுடனே!
(அப்பாடா! இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு)