மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரபுதேவா-சிம்பு: யாருடன் காதல்? நயன்தாரா

தமிழ் திரையுலகின் தற்போதைய சூடான விவாதம் நயன்தாரா-பிரபுதேவா காதல்தான். திருப்பதி கோவிலில் ரகசிய திருமணம், துபாயில் ஜோடியாக ஷாப்பிங், நயன்தாரா கையில் பிரபு என்ற பெயரில் பச்சை குத்தப்பட்டிருப்பது என தொடர்ந்து காதல் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருவருமே காதல் பற்றி பதில் சொல்லாமல் மவுனம் காத்தனர்

இப்போது முதல் தடவையாக நயன்தாரா இதுபற்றி கருத்து சொல்லி உள்ளார். ஐதராபாத்தில் அவர் அளித்த பரபரப்பான பேட்டி வருமாறு: யாரையும் காதலிக்கவில்லை, நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களைத்தான் காதலிக்கிறேன். அவர் எனக்க நண்பர்தான்

நான் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னைப் பற்றி வெளியாகும் வதந்திகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரமும் எனக்கு இல்லை. நான் பதில் சொல்ல வேண்டியது எனது பெற்றோருக்குத்தான். அவர்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். முழு சுதந்திரமும் கொடுத்து இருக்கிறார்கள். அதை வீணடிக்கமாட்டேன்ஒரு கதை பற்றி இருவரும் சந்தித்து விவாதித்தோம். வேறு எந்த காரணமும் இல்லை. சினிமாவுக்காக மட்டுமே நடந்த சந்திப்பு அது. நான் யாரையும் காதலிக்கவில்லை

ஆண்கள் நான் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அப்படி நடிக்கிறேன்

அந்த படத்தில் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தனர். பிறகு நான் நடித்த சில படங்கள் வெற்றி பெறாததால் சம்பளத்தை குறைக்க சொன்னார்கள். மறுத்து விட்டேன். இதனால் என்னை விட குறைவான சம்பளம் வாங்கும் ஒரு நடிகையை தேர்வு செய்து நடிக்க வைத்தனர், இதில் தவறு ஏதும் இல்லை
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. தலைப்பை கரெக்டா வையிங்கப்பா!

    பகீர்னு இருக்கு பார்த்தவுடனே!

    (அப்பாடா! இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு)

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.