மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நாடோடிகள் - ஆள் ரெடி ஸக்ஸஸ்!

சிக்குமாருக்கு கிடைத்திருக்கும் மூன்றாவது வெற்றி. இயக்குநர் தயாரிப்பாளர் என தொடர்த்து இப்போது கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனக்கு கிடைத்த தோல்விகளை விதையாக்கி வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான கதை, தேவையற்ற திணிப்புகள் இல்லாத திரைக்கதை, கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என எல்லா வகையிலும் 'நாடோடிகள்' நச்சுனு இருக்கு! ராஜபாளையத்தில் துவங்கும் கதை, நாமக்கல், ஈரோடு, சிவன்மலை, கன்னியாகுமரி என பல இடங்களுக்கு பயணிக்கிறது.


கருணா (சசிக்குமார்) , சந்திரன் (வசந்த் விஜய்) , பாண்டி (கல்லூரி பரணி) இவர்கள் மூவரும் நண்பர்கள். இவர்கள் மூவருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு லட்சியம் இருக்கு. கருணா பி. ஏ. வரலாறு தங்கப்பதக்கம் வென்றவர்.

எப்படியாவது அரசு உத்தியோகத்தில் சேர்ந்துவிட முயன்று கொண்டிருப்பவர். அப்போதான் இவரின் அத்தை மகள் நல்லம்மா (அபினயா) இவருக்கு கிடைக்கும். சந்திரன், எப்படியாவது கம்ப்யூட்டர் சென்டர் வைத்து செட்டிலாவதே இவர் கனவு. கருணாவின் தங்கைக்கும் (அநநியா) இவருக்கும் லவ்ஸ்! இது கருணாவுக்கும் தெரியும். அடுத்தது பாண்டி, பெண்கள் விஷயத்தில் இவருக்கு "லூசு" பட்டம் தான் மிச்சம். வெளிநாடு செல்வதே இவர் கனவு, பாஸ்போர்டுக்காக வெயிட்டிங்.

இப்படி எல்லோரும் ஏதோ ஒன்றைத் தேடி பயணித்துக் கொண்டிருக்க, கையில பையோட வந்து இறங்குது ஒரு பிரச்சனை. கருணாவின் நண்பன் சரவணன் அறிமுகமாகிறார்.

கருணா வைத்தேடி வந்த சரவணன், வந்த இடத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்ய, அவரை காப்பாற்றிய பின் தெரிகிறது அது காதல் பிரச்சனை என்று. தன் நண்பனின் நண்பனுக்காக கருணாவின் நண்பர்கள் களமிறங்குகிறார்கள். நாமக்கல் பகுதியின் பெரிய கையாக இருக்கும் பழனிவேல் ராஜனின் மகள் பிரபா ஷாந்தினி. இவரைத் தான் சரவணன் காதலிக்கிறார்.

மிகவும் கொடுமையான இழப்புகளுக்கு மத்தியில் சரவணன் பிரபாவை சேர்த்து வைக்கிறார்கள் நண்பர்கள்.

சந்திரன் ஒரு காலை இழந்து, பாண்டி காதில் அடிபட்டு செவிடாகி, கருணாவின் நெற்றியில் அடிபட்டு ஒரு கண் வீங்கிய நிலையில்... கேள்விக்குரியாய் நிற்கிறது சூழ்நிலை. இனி... போலீஸின் பிடியில் கருணாவின் நண்பர்கள். கருணாவின் அரசு உத்தியோகத்தோடு காதலும் கனவாய் மறைந்துவிடுகிறது.

சந்திரனுக்கு செயற்கை கால், பாண்டிக்கு காது கேட்கிற மிஷின் என எல்லாம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப, திரைக்கதையில் நெத்தியடி மாதிரி ஒரு திருப்பம். யாரின் காதலுக்காக எல்லாவற்றையும் இழந்தார்களோ, அவர்கள் பிரிந்து விடுகிறார்கள். ஏன் என்று விசாரித்தால், கட்டில் சமாசாரங்களை மட்டுமே அவர்கள் காதல் என்று நினைத்தது தெரியவருகிறது. ஒன்றும் புரியாத அதிர்ச்சியில் கருணாவும் அவன் நண்பர்களும். கோபத்தில் இருவரையும் கொன்றுவிட திட்டம் போடுகிறார்கள். கடைசியில் சசிக்குமாரின் அட்வைஸ் வசனங்களோடு க்ளைமாக்ஸ்!

இதற்கு இடையில் சிரிக்க வைக்க கஞ்சா கருப்பு வந்து போகிறார். கதையில் வந்துபோகிற அத்தனை கதாபாத்திரங்களும் மறக்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு 'சேசிங் சீன்' பட்டையை கிளப்புகிறது!

அதுவும் காதலர்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டு, கழுத்தில் இருக்கும் செயினை அறுத்து கொடுக்கும் காட்சியில் சசிக்குமாருக்கு நூறுக்கு நூறு மார்க் போடலாம். செக்சுக்காகவா ஒருவன் தற்கொலை செய்து கொள்வான்?

உயிருக்கு உயிராய் காதலித்தவர்கள் எப்படி திடீரென பிரிவார்கள். இப்படிப்பட்ட நண்பனுக்கு இன்னொரு நண்பன் எப்படி உதவி செய்ய முடியும்? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், இந்தக் கேள்விகளுக்கான நியாயமான விடைகள் படம் பார்க்கும் போது தெளிவாக புரியும்.

படத்தின் முதல் பலம் ஒளிப்பதிவாளர் கதிர். கதிரின் வேலை படத்தில் அபாரம். சசிக்குமார் ஓட்டி செல்லும் டாட்டா சுமோவோடு சேர்ந்து கதிரின் கேமராவும் தர தர தரவென பயணித்திருக்கிறது. அடுத்தவர், இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.

கதிரின் கேமரா வேகத்திற்கு இவரின் வயலின் இசையும் ஈடு கொடுத்திருக்கிறது. பாடல்களும் படத்திற்கு பொருத்தம். காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்குகிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. கமர்ஷியல் கலாட்டாக்களுக்கு சவுக்கடி கொடுக்க மீண்டும் ஒரு வெற்றிப்படம்.

நாடோடிகள் - ஆள் ரெடி ஸக்ஸஸ்!
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

1 நான் சம்பாதிச்சது:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.