கொச்சினில் நடந்து வருகிறது சுறா படப்பிடிப்பு. ஆனாலும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி நடத்துகிற பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அங்கிருந்து பறந்து வந்தார் விஜய். நடிப்பில் ரஜினி வழியை பின்பற்றும் விஜய், அடிப்படையில் கமல் மேல் மிகவும் பற்று கொண்டவர். அதனால்தான் இவ்வளவு கடுமையான வேலைகளுக்கு இடையேயும் கொச்சினிலிருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.சரி, கொச்சின் எபிசோட் சொல்லும் குளுகுளு மேட்டர் என்ன?
இந்த படத்தை துவங்கும் முன்பாகவே தமன்னாவை தங்க பஸ்பம் போல காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்களாம். அதற்கு பொறுத்தமாகதான் காஸ்ட்யூம்களும் தயாரிக்கப் பட்டிருக்கின்றன. அடிக்கிற மழையிலே ஐஸ்கிரீமை விழுங்கிய மாதிரி, தமன்னாவை தண்ணியிலே போட்டு முங்கவும் முடிவெடுத்திருந்தாங்களாம். எல்லாவற்றுக்கும் சம்மதித்த தமன்னா, நாள் முழுவதும் கொச்சின் கடலில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
ஒரு காட்சியில் விஜய் தோளில் பாய்ந்து ஏறிக் கொள்வது போல நடிக்க வேண்டும். சுமார் பத்து முறையாவது அவர் விஜய் மீது பாய்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் யூனிட்டில். பெரிய ஹீரோக்களை பொறுத்தவரை ரீடேக் என்றால் லேசாக எரிச்சல் படவும் செய்வார்கள். ஆனால், இந்த முறை விஜயும் பொறுமையாக இருந்தாராம்.
பஞ்ச் டயலாக்கை ரசிக்கிற மனுஷருக்கு, பஞ்சு மூட்டைய சுமக்கறதுக்கு கசக்குமா என்ன?





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.