
கலிகாலத்தில் இப்படியொரு காஸ்ட்லியான ஸ்டேட்மெண்டை வெளியிட பரந்த மனசு வேண்டும். அந்த மனசு அபிராமி ராமநாதனுக்கு இருக்கிறது. அவர்தான் இந்த இலவச அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
சென்னை அபிராமி மாலில் அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி, அன்னை அபிராமி, பால அபிராமி ஆகிய திரையரங்குகள் உள்ளன. சனி, ஞாயிறு இரு தினங்கள் காலை 11 மணிக்கு சிறந்த குறும்படங்களை இத்திரையரங்குகளில் இலவசமாக திரையிட அனுமதி அளிப்பதாக அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
குறும்பட படைப்பாளிகளுக்கு இது அரிய வாய்ப்பு. இந்த முன்முயற்சி பல சாதனைகளை படைக்க வாழ்த்துவோம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.