
நாவல்களை படமாக்குகிற ஐடியா இருக்கா என்ற ஒரு கேள்விக்கு, இன்னும் என் மண்ணில் நடந்த கதைகளே ஓராயிரம் இருக்கு. அதுக்குள்ளே எதுக்கு அடுத்தவங்களோட நாவல் என்றார் சசிக்குமார். அப்படி அவர் மனதில் வைத்து பூட்டி வைத்திருக்கும் பிரமாதமான கதைக்குதான் இந்த 54 வயசு ஹீரோ. அதுபோக, படத்தில் இன்னும் இரண்டு சிறுமிகளை அறிமுகப்படுத்துகிறாராம்.
பசங்க படத்தில் வாத்தியாராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷின் மகள்கள்தான் அந்த இருவரும். இப்படத்தை தயாரித்து வருகிற விக்ரம், கதை கேட்டு கை குலுக்கியதோடு சரி. ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு வருவதே இல்லையாம். படைப்பாளியின் சுதந்திரம் ரொம்ப முக்கியம் என்பதால்தான் இந்த ஆப்சென்ட்! வெறும் ஸ்டார்ட், கட்டோடு ஒதுங்கிக் கொள்வது என்று தீர்மானித்திருக்கும் சசியை ஒரு சீனிலாவது தலைகாட்ட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்களாம் நண்பர்கள்.
சென்ட்டிமென்ட்?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.