
பாலாவின் முதல் படம் சேதுவில் விக்ரம் நடித்தார். இந்தப் படம் அவரை தனித்த ஹீரோவாக அடையாளம் காட்டியது. இந்தப் படத்துக்குப் பிறகே விக்ரம் என்ற ஹீரோ உருவானார். பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த அடுத்தப் படம், பிதாமகன். இது அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
இனி விக்ரம் பாலா இயக்கத்தில் நடிக்கயிருப்பது மூன்றாவது படம். இதனை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் தயாரிக்கிறது. படத்துக்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது கிளவுட் நைன் தூங்கா நகரம் படத்தை தயாரிக்கிறது. அடுத்து கௌதம் இயக்கும் அஜித்தின் 50வது படம். அதையடுத்து பாலா விக்ரம் இணையும் படத்தை தயாரிக்கவுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.