
மருந்துக்குக்கூட நல்ல விஷயங்கள் தெரியாத நான்கு கிராமத்து இளைஞர்கள் சின்னச் சின்ன தப்புகள் செய்கிறார்கள். கிராமத்தில் இனியும் இருக்க முடியாது என்ற நிலையில் சென்னைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சம்பவங்கள், பிரச்சனைகள், காதல் இவைதான் கதை.
நான்கு புதுமுகங்கள் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். படத்தில் அவர்களின் பெயர்கள் பாண்டி, ஓணான், மங்கா, மாரி. இதில் பாண்டியாக ஹரிஷ், ஓணானாக கோபால், மங்காவாக அலெக்ஸ், மாரியாக லோகேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷம்முவும் நடித்துள்ளார்.
இயக்குனர் ரவிமரியா பெண்மை கலந்த வேடத்தில் நடித்துள்ளார். இவர்தான் படத்தின் வில்லன். இவர்களுடன் இயக்குனர்கள் பொன்வண்ணன், ஜி.எம்.குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு விஜய் ஆம்ஸ்ட்ராங். குருகல்யாண் இசையமைத்துள்ளார். கோலா பாஸ்கர் எடிட்டிங், சண்டைப் பயிற்சி ஸ்பீடு சையத்.
பிஎஸ்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் பி.எஸ்.சேகர் ரெட்டி தயாரித்துள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.