மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> I.P.L அணிகளுக்கு பணம் வந்தது எப்படி?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொச்சி அணியை ஏலம் எடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதன் காரணமாக கொச்சி அணிக்கு பணமுதலீடு எப்படி வந்தது என்பது பற்றிய சர்ச்சையும் எழுந்தும் இருக்கிறது.

இதனால் ஏற்கனவே ஐ.பி.எல். போட்டிகளில் ஏலம் விடப்பட்ட அணிகளுக்கு நிதி ஆதாரம் எப்படி வந்தது என்ற அதிரடி விசாரணையில் நேற்று மும்பை வருமான வரித்துறையினரும், அமலாக்க பிரிவினரும் இறங்கினார்கள்.

அணிகளின் ஏல விவகாரத்தில் சட்டத்திற்கு விரோதமாக பணம் புழங்கியதா? கறுப்பு பணம் எதுவும் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டனர்.

இது பற்றி வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படவில்லை என்றும், அணிகளுக்கு நிதி ஆதாரம் வந்தது எப்படி? என்பது பற்றி மட்டும்தான் விசாரணை செய்யப்படுகிறது என்றும் வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.