
மருத்துவ உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதி களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் ரத்தப்புற்று நோய்களான அனீ மியா, தலசீமியா போன்றவற்றையும் குணப் படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது. அனீமியா என்பது ரத்த சிவப்பணுக்கள் பற்றாக் குறைவால் ஏற்படுவதாகும். தலசீமியா என்பது ரத்தத்துக்கு போதுமான அளவு ஹீமோ குளோபின் கிடைக்காததால் ஏற்படுவ தாகும். (ஹீமோகுளோபின் எனப்படுவது ரத்தத்துக்கு சிவப்பு நிறமளிக்கும் நிறமியாகும்) இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமீபத்தில் நடந்த உலக ஸ்டெம்செல் மாநாட்டில் இந்த சிகிச்சை முறை பற்றி விளக்கினார்கள். இன்னும் சில ஆண்டுகளில் இந்த முறை பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.