மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இலங்கை படவிழா மர்மம் – மறுக்கும் ஜெனிலியா

இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு செல்லவில்லை என்கிறார் ஜெனிலியா. படவிழாவுக்கு அவர் சென்றார், அவரது எந்தப் படத்துக்கும் ஒத்துழைப்பு தரப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறது நடிகர் சங்கமும், பெப்சி அமைப்பும். உண்மையில் நடந்தது என்ன?

கோவாவை பூர்வீகமாகக் கொண்ட ஜெனிலியா வெளியுலகுக்கு தெ‌ரிய வந்தது தமிழ்ப் படமான பாய்ஸில் நடித்த பிறகுதான். இந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்தாலும் அவரது அடையாளமாக தமிழ்ப் படங்களே உள்ளன. தற்போது தனுஷ் ஜோடியாக உத்தமபுத்திரன் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வேலாயுதம் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

இந்நிலையில்தான் இலங்கையில் நடந்த படவிழாவில் ஜெனிலியா கலந்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த தகவல் வெளியான உடன் வேலாயுதம் படத்திலிருந்து ஜெனிலியாவை நீக்குவதாக அறிவித்தார் படத்தை தயா‌ரிக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். தமிழ் திரையுலகம் ஜெனிலியாவின் இலங்கை விசிட்டை அத்தனை சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லை.

இதுகுறித்து பேசிய ஜெனிலியாவோ இலங்கைக்கு போகவேயில்லை என சாதிக்கிறார். ஆனால், ஜெனிலியா தனது காதலருடன் இலங்கை சென்றது உண்மையென்றும், பிரச்சனை பெரிதாவதை அறிந்ததும் உடனடியாக இந்தியா திரும்பினார் என்றும், அவரது பாஸ்போர்ட்டை ப‌ரிசோதித்தால் உண்மை தெ‌ரிந்துவிடும் எனவும் உறுதியாக கூறுகிறார்கள் அவர்மீது நடவடிக்கை எடுத்தவர்கள்.

எது எப்படியோ பிரச்சனையின் மையத்தில் இருக்கிறார் ஜெனிலியா என்பது மட்டும் உறுதி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.