மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமலின் கண்டிப்பான முடிவு

கதை விஷயத்தில் எப்போதும் கண்டிப்புடன்தான் இருப்பார் கமல். ஆனால் மன்மதன் அம்பு விஷயத்தில் கண்டிப்பின் சதவீதம் அதிக‌ரித்திருக்கிறது.

இந்த ரொமா‌ண்டிக் காமெடி படத்தின் கதை விவாதத்தில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், இரா.முருகன், கிரேஸி மோகன் என்று சொற்ப நபர்களே கலந்து கொண்டனர். படத்தின் ஒன் லைன் கூட கே.எஸ்.ரவிக்குமா‌ரின் உதவியாளர்களுக்கு தெ‌ரியாது என்கிறது ஆழ்வார்பேட்டை அலுவலகம்.

இந்த ராணுவ பாதுகாப்புக்கு காரணம் இருக்கிறது. கமல் எந்தப் படத்தைத் தொடங்கினாலும் இது என் கதை என்று வழக்குப் போட ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. கதை கசிந்தால்தானே இந்த வில்லங்கம் என்று யாருக்கும் கதையை சொல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

காய்ப்பது ஒருவகை கஷ்டமென்றால் கல்லடி படாமல் தப்பிப்பது அதைவிட கஷ்டம் போலிருக்கிறதே.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.