
இந்த ரொமாண்டிக் காமெடி படத்தின் கதை விவாதத்தில் கமல், கே.எஸ்.ரவிக்குமார், இரா.முருகன், கிரேஸி மோகன் என்று சொற்ப நபர்களே கலந்து கொண்டனர். படத்தின் ஒன் லைன் கூட கே.எஸ்.ரவிக்குமாரின் உதவியாளர்களுக்கு தெரியாது என்கிறது ஆழ்வார்பேட்டை அலுவலகம்.
இந்த ராணுவ பாதுகாப்புக்கு காரணம் இருக்கிறது. கமல் எந்தப் படத்தைத் தொடங்கினாலும் இது என் கதை என்று வழக்குப் போட ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. கதை கசிந்தால்தானே இந்த வில்லங்கம் என்று யாருக்கும் கதையை சொல்லாமல் படப்பிடிப்புக்கு கிளம்பியிருக்கிறார்கள்.
காய்ப்பது ஒருவகை கஷ்டமென்றால் கல்லடி படாமல் தப்பிப்பது அதைவிட கஷ்டம் போலிருக்கிறதே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.