மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்பு விளக்கம் லிங்குசாமியின் பதில்???

சிம்பு வானம் படத்தில் நடிக்க‌ப் போய்விட்டதால் லிங்குசாமி விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்று இன்டஸ்ட்‌ரி முழுக்க தகவல் பரவியிருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது விளக்கத்தை பதிவு செய்திருக்கிறார் சிம்பு.

லிங்குசாமி தயா‌ரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். பிறகு, படத்தை லிங்குசாமி இயக்குவார், கிளவுட் நைன் துரை தயாநிதி தயா‌ரிப்பார் என்றார்கள். அடிப்படையில் பார்த்தால் கிளவுட் நைனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நான் அவர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை.

லிங்குசாமி படத்தின் கதையை சொல்வார் என்று 100 நாட்களுக்கு மேல் காத்திருந்தேன். ஆனால் அவர் கதை சொல்லவில்லை. இதன் காரணமாகதான் வானம் படத்தை தொடங்கினேன். துரை தயாநிதியிடம் லிங்குசாமி படம் குறித்து கேட்டதற்கு, செப்டம்பர் முதல் தேதி படத்தை ஆரம்பிக்கலாம் என்றார்.

இந்நிலையில் லிங்குசாமி வேறொரு நடிகரை வைத்து படத்தை ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது அநியாயம். என்னை காக்க வைத்துவிட்டு இன்னொரு நடிகரை நடிக்க வைப்பது ச‌ரியல்ல என்று சிம்பு கூறியுள்ளார்.

லிங்குசாமியின் பதில் விளக்கம் எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.