
இதுபற்றி பேசிய ரஹ்மான் தனது வேதனை ஒன்றையும் தெரிவித்தார். அதாவது காமன்வெல்த் போட்டி குறித்து எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வருவதாகவும், அது இந்தியாவின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதாகவும், இதுபோன்ற செய்திகளை லண்டனில் கேட்க நேர்ந்தபோது மிகவும் வேதனைப்பட்டதாக தெரிவித்தார்.
காமென்வெல்த் போட்டிகள் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுகிறது. இதில் பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. போட்டிக்கான கட்டுமான பணிகள் உள்பட எதுவும் சரியாக நடைபெறவில்லை. இதனைத்தான் ஊடகங்கள் சுட்டிக் காட்டின.
ஊழல் செய்ததை தேசிய அவமானமாகக் கருதாத சிலர், அதுபற்றி எழுதினால் மட்டும் தேசத்துக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக வேதனைப்படுகிறார்கள். இப்படி வேதனைப்படும் யாரும் குஜராத் படுகொலை நடந்தபோதோ, ஒரிஸா கலவரத்தின் போதோ, விதர்ப்பா விவசாயிகள் தற்கொலை செய்த போதோ தேசத்துக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறவும் இல்லை, வேதனை அடையவுமில்லை.
அப்போதெல்லாம் கள்ள மவுனம் சாதித்தவர்கள் அரசியல்வாதிகளின் ஊழலைப் பற்றி பேசும் போது மட்டும் தேசத்துக்கு அவப்பெயர் என வேதனைப்படுவது...
விந்தையிலும் விந்தை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.