மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சத்யராஜுடன் அசத்திய சாந்தனு.

சக்கரக்கட்டி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியவர் சாந்தனு. முதல் படத்தில் இளமைக் குறும்புடன் நடித்த சாந்தனு தற்போது நடித்துவரும் ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் அதிரடி நாயகனாக மாறியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சானாகான் நடித்துள்ளார்.

தனது தந்தை பாக்கியராஜின் இயக்கத்தில் 'சித்து +2' என்னும் படத்தை முடித்துள்ள சாந்தனுவுக்கு "ஆயிரம் விளக்கு" தமிழில் மூன்றாவது படம்.

இதற்கு முன் மலையாளத்தில் மோகன் லாலுடன் ஒரு படத்தில் நடித்துள்ள சாந்தனு, ஆயிரம் விளக்கில் சத்யராஜுடன் நடிப்பில் போட்டிப் போடுகிறார்.

இந்தச் சின்ன வயதிலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்த சந்தோஷத்தில் உள்ளார் சாந்தனு. இது குறித்து பேசும் போது அவர்,

“சத்யராஜ் சார், மோகன் லால் சார் போன்ற மிகப் பெரிய நடிகர்களுடன் எல்லாம் நடிப்பது எனது அதிர்ஷ்டம். நடிப்பில் நான் நன்றாக வரவேண்டும் என்று எனது தந்தை மற்றும் அவரது நண்பர்கள் பலரும் நினைக்கிறார்கள்.

அவர்களின் ஆசியுடன் சிறப்பாக நடித்து பெரிய அளவில் வர முயற்சி செய்வேன். அப்பாவின் பெயரை காப்பாற்றுவேன். அப்படிக் காப்பாற்றாவிட்டாலும், அவருக்கு கெட்டப் பெயரை வாங்கித் தரமாட்டேன்.

எனது முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் சாரின் பாடலுக்கு சிறப்பாக ஆடியது எனக்கு பெருமையாக இருந்தது.


ஒரே ஒரு குத்துப் பாட்டுக்காவது ஆடனும் என்பது எனது ரொம்ப நாள் ஆசை. அந்த ஆசை ஆயிரம் விளக்கு படத்தில் நிறை வேறியுள்ளது. அதுவும் சத்யராஜ் சாருடன் சேர்ந்து ஆடியது இன்னும் எனக்கு கூடுதல் சந்தோஷத்தை தந்துள்ளது.’’ என்று இளமைத் துடிப்புடன் கூறிய சாந்தனு முகத்தில் ஆயிரம் விளக்குகள் சேர்ந்து பளிச்சிட்டன.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.